*நம் கண்கள் சந்தித்துக்கொண்டபோதல்ல
மனங்கள் ஒன்றுபட்டபோதல்ல
உடல்கள் சங்கமித்தபோதல்ல
அதன்பிறகு நினைவற்ற தூக்கத்திலும்
பிடிவாதமாக என் கைகளை
சிறைப்படுத்திக்கொண்டிருந்த
உன் உள்ளங்கைச் சூட்டில்
அதிகம் உணர்ந்தேன்
உன் காதலை*